நீரிழிவு நோயாளிகள் அன்னாசி பழம் சாப்பிட கூடாது.? என்ன காரணம்.!?

பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவது என்பது உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். பழங்களில் உள்ள சத்துக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் போன்றவை உடலுக்கு மிகவும் அவசியமானதாக இருந்து வருகிறது. குறிப்பாக அன்னாசி பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் தினமும் குறிப்பிட்ட அளவு அண்ணாசி பழம் சாப்பிடுவதன் மூலம் உடலில் பல வகையான நோய்கள் குணப்படுத்தப்படுகிறது.
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அன்னாசி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, மெக்னீசியம், தாதுக்கள், மாங்கனிசு போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலானவர்களுக்கு அன்னாசிப்பழம் மிகவும் பிடித்தமான பலமாக இருந்து வருகிறது. இப்பழம் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இவ்வாறு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு தரும் அன்னாசி பழத்தை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா என்று பலருக்கும் கேள்வி இருந்து வருகிறது. அன்னாசி பழத்தில் அதிகளவு இனிப்பு சத்து நிறைந்துள்ளதால் இதை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் அன்னாசி பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற்படும் புண்கள் மற்றும் காயங்களை அதிகரித்து விடுகிறது. நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவு அன்னாசி பழத்தை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் பசியை கட்டுப்படுத்துகிறது. ஆனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.