உங்க பெட்ரூம் இப்படி இருந்தா, கணவன் மனைவிக்குள் பிரச்சனையே வராது.! 

உங்க பெட்ரூம் இப்படி இருந்தா, கணவன் மனைவிக்குள் பிரச்சனையே வராது.! 



bedroom should in this type

கணவன், மனைவி பிரச்சினைகளுக்கு அவர்களது படுக்கையறை வாஸ்து காரணம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், இவ்வாறு வாஸ்து குறைபாடு எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி கணவன் மனைவியின் தாம்பத்திய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.

bedroom

படுக்கை அறையில் சாமி படம், மத புத்தகங்கள் உள்ளிட்டவை இருக்கக் கூடாது. மேலும், போர்வை, தலையணை, திரைச்சீலை உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் கூடாது. நிறைய பேர் படுக்கை அறையில் தாஜ்மஹால் படத்தை வைத்திருப்பார்கள். அதை காதலின் அடையாளம் என்று கூறுவார்கள். ஆனால், அது உண்மையில் ஒரு கல்லறை. எனவே, அதை படுக்கையறையில் வைத்திருப்பது தவறு. 

மேலும் வேட்டை விலங்குகள் போன்ற படங்களை படுக்கையறையில் வைக்கக்கூடாது. நிம்மதி மற்றும் ஆறுதலை தரக்கூடிய படுக்கையறையில் அமைதியை நிலைநாட்டும் விதமாக மயில் மற்றும் பூக்கள் உள்ளிட்டவற்றின் படங்களையோ அல்லது பறவைகளின் படங்களையோ வைத்திருக்கலாம். 

bedroom

படுக்கையறையில் இரண்டு மெத்தைகள் இரண்டு படுகைகள் இருப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஒற்றை படுகையை பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலும் படுக்கை அறையுடன் குளியலறை சேர்ந்து இருக்கும். படுக்கை அறை ஈரமாக இருப்பது நல்லது இல்லை. அத்துடன் இது தேவையற்ற நோய் தொற்றுகளை ஏற்படுத்துவதுடன், அது வீட்டில் கடன் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். 

பலரும் அறையின் மூலையில் படுக்கையை வைத்திருப்பார்கள். இது தவறு அறையின் மையப் பகுதியில் படுக்கை இருக்க வேண்டும். நாம் தூங்கும் போது தலை தெற்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.