மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும்.? மம்தா பானர்ஜி முதல்வராகக் கூடாது.! பொங்கி எழுந்த திரிபுரா முதல்வர்.!

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும்.? மம்தா பானர்ஜி முதல்வராகக் கூடாது.! பொங்கி எழுந்த திரிபுரா முதல்வர்.!



yripura cm talk about mamta banarji

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார், மம்தா பானர்ஜி. ஆனாலும் நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் அமரும் தகுதியை இழந்து விட்டார் என திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் குமார் விம்ரசித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்றது. பாஜக 77 இடங்களில் வெற்றி பெற்றது. திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை பெற்றாலும் அக்கட்சியின் தலைவரும் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.  

இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டு இன்று முதல்வராக பதவியேற்றார். தான் நின்ற தொகுதியில் தோல்வியை சந்தித்த மம்தா பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும். இதேபோல் கடந்த 2011 இல் மம்தா பானர்ஜி பதவியேற்றபோதும் அவர் எம்எல்ஏ-வாக இல்லை. இதனையடுத்து போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவியில் அமர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

mamta banarji

இந்த நிலையில், நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவியதால் தார்மீக அடிப்படையில் மம்தா பானர்ஜி முதல்வராகக் கூடாது என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் தேவ் குமார் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறுகையில், மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியடைந்து விட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எப்படி முதல்வராக முடியும். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேறு ஒருவரே முதல்வர் பதவியில் அமர வேண்டும். முதல்வர் பதவி வகிக்கும் தார்மீக உரிமையை மம்தா இழந்து விட்டார் என தெரிவித்துள்ளார்.