கடன் தொகை கேட்டு அவதூறு பேச்சு; இளைஞர் விஷம் குடித்து தற்கொலை.!

கடன் தொகை கேட்டு அவதூறு பேச்சு; இளைஞர் விஷம் குடித்து தற்கொலை.!



Young men commit suicide Uttar pradesh

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாமிலி மாவட்டம் கண்ட்லா பகுதியைச் சேர்ந்தவர் ராம்வீர் (வயது 38). இந்த கிராமத்தில் அன்சு என்பவர் வட்டிக்கு பணம் கொடுத்து வரும் தொழில் செய்து வந்துள்ளார். 

இவரிடம் ராம்வீர் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அன்சு, ராம்வீரின் வீட்டிற்கு சென்று ரூ.20000 பணம் வாங்கிய நிலையில், கூடுதலாக பணம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

UttarPradesh

இதனால் மனமுடைந்து போன ராம்வீர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தகலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.