நடு அணைக்குள் நின்று டிக் டாக் செய்த இளைஞன்! கண்ணிமைக்கும் நொடியில் நடத்த பதறவைக்கும் விபரீதம்!! ஷாக் வீடியோ இதோ..

நடு அணைக்குள் நின்று டிக் டாக் செய்த இளைஞன்! கண்ணிமைக்கும் நொடியில் நடத்த பதறவைக்கும் விபரீதம்!! ஷாக் வீடியோ இதோ..


young man dead while do tiktok in dam

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்தி வசித்து வந்தவர் தினேஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இரு நண்பர்களுடன் கப்பலவாகு தடுப்பணை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்துள்ளது.

அங்கு மிகவும் உற்சாகத்துடன் இருந்த தினேஷ் டிக்டாக் மோகத்தால் திடீரென தடுப்பணை நடுபகுதிக்குள் இறங்கி டிக் டாக்செய்துள்ளார். அதனை அவரது நண்பர்கள் கரையோரத்தில் நின்று வீடியோ எடுத்துக் கொண்டு இருந்துள்ளார்.

      tik tok

இந்நிலையில் தடுப்பணை பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மூவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனை கண்ட கரையோர பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் விரைந்து சென்று தினேஷின் இரு நண்பர்களையும் மீட்டு காப்பாற்றினர். ஆனால் தினேஷ் நடுபகுதியில் நின்றதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் வேகமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதையடுத்து இதுதொடர்பாக தேசிய பேரிடர் மீட்புகுழுவிற்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், தினேஷை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர். ஆனால் 2 நாட்களாக தீவிரமாக தேடியும் அவரது உடல் கிடைக்காத நிலையில் அவரது உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.