2 கணவரோடு தான் வாழ்வேன்.. மின் கம்பத்தில் ஏறி இளம்பெண் விபரீத கோரிக்கை!

2 கணவரோடு தான் வாழ்வேன்.. மின் கம்பத்தில் ஏறி இளம்பெண் விபரீத கோரிக்கை!



Women try to suicide for need 2 husbands

உத்தரச மாநிலத்தில் உள்ள பிப்ரை பகுதியைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஷில்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே ஷில்பாபுவிற்கு பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இந்த பழங கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவனுக்கு தெரிய வர தம்பதியினர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன வேதனையில் இருந்த ஷில்பா நேற்று தனது வீட்டின் முன்பு உள்ள மின் கம்பத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் அவர் கீழே இறங்கவில்லை.

இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அந்த பெண்ணை உயிருடன் மீட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஷில்பா கள்ளத்தொடர்பு வைத்துள்ள இளைஞரை தனது வீட்டில் தங்க வைக்க அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கைக்கு கணவன் ஒப்புக்கொள்ளாததால், சில்பா தற்கொலை முயற்சி செய்துள்ளதாக கூறியுள்ளார்.