பேருந்தை ஓட்டிச்சென்ற பஸ் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு.! பெண் பயணியின் சாமர்த்தியம்.! சிங்க பெண்ணிற்க்கு குவியும் பாராட்டுக்கள்.!

பேருந்தை ஓட்டிச்சென்ற பஸ் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு.! பெண் பயணியின் சாமர்த்தியம்.! சிங்க பெண்ணிற்க்கு குவியும் பாராட்டுக்கள்.!



women saved bus driver

சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சுற்றுலா அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதனால் தடுமாற்றம் அடைந்து அவர் ஒரு கட்டத்தில் மயங்கி விழும் நிலைக்கு சென்று விட்டார்.  

இதனை கவனித்த பெண் பயணி யோகித்தா சதவ் என்பவர் பேருந்தை நிறுத்தும்படி கேட்டுள்ளார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. யோகித்தா சதவ் தானே பேருந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்து ஓட்ட ஆரம்பித்துள்ளார்.

இதானையடுத்து அந்தப்பெண் பயணி சாமர்த்தியமாக பேருந்தை ஓடிச்சென்று மாரடைப்பு அந்த ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதித்தார். பெண் பயணியின் சாமர்த்திய செயலை பார்த்த பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.