ஏமாற்றி அழைத்துச் சென்று, தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்! மகன் கண்முன்னே நடந்த கொடூரம்!.பகீர் சம்பவம்!

ஏமாற்றி அழைத்துச் சென்று, தனது மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்! மகன் கண்முன்னே நடந்த கொடூரம்!.பகீர் சம்பவம்!



Woman rapped by huband friend with his help

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினங்குளம் என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது 25 வயது நிறைந்த மனைவி மற்றும் மகனை கடற்கரைக்குச் செல்லலாம் எனக் கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். ஆனால் அவர் கடற்கரைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் தனது மனைவியை வலுகட்டாயமாக, கட்டாயப்படுத்தி மது அருந்தவைத்துள்ளார். பின்னர் தனது நண்பர்களுக்கு விருந்தளித்துள்ளார்.  மேலும் அவரது நண்பர்களும் அந்தப் பெண்ணின் 5 வயது மகன் முன்பு அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களை தடுக்க முயன்ற சிறுவனை அடித்து வெளியே வீசியுள்ளனர்.

KERALA

 பின்னர் அந்த பெண்ணின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தள்ளாடியபடியே தனது மகனுடன் அங்கிருந்து தப்பித்த அந்த பெண் அந்த வழியாக காரில் சென்ற இளைஞர்களிடம் உதவி கேட்டுள்ளார். 

பின்னர் அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணைக்கு பிறகு, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.