இளம்பெண் தற்கொலை.! முக்கிய ஆதாரம் சிக்கியது.! மரணத்திற்கு முன் மனைவி அனுப்பிய மெசேஜ்.!

இளம்பெண் தற்கொலை.! முக்கிய ஆதாரம் சிக்கியது.! மரணத்திற்கு முன் மனைவி அனுப்பிய மெசேஜ்.!



wife-death-by-dowry-torture

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா. 23 வயது நிரம்பிய இவரை, கிரண்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணத்தின் போது, 100 பவுன் நகை, சொகுசு கார், நிலம் உள்ளிட்ட வரதட்சணையை பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை விஸ்மாயா, கணவர் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணின் மரணத்துக்கு வரதட்சணை கொடுமையை காரணம் எனத் தெரியவந்தது. அவரது பிரேதபரிசோதனை முடிவில் அவரின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. 

suicide

இந்தநிலையில், மரணம் அடைவதற்கு முன்னர், தன்னை கணவர் அடித்து கொடுமைப்படுத்தியதையும், அதனால் ஏற்பட்ட காயத்தையும் அவர் உறவினர்களுக்கு  வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இதனை அவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.