கணவர் லிப்ஸ்டிக் மாற்றி வாங்கி வந்தததால் போலீசில் புகாரளித்த மனைவி.!

கணவர் லிப்ஸ்டிக் மாற்றி வாங்கி வந்தததால் போலீசில் புகாரளித்த மனைவி.!



Wife complaint against husband for lipstick

உத்திரபிரதேசம் மாநிலம் ஆந்திராவில் திருமணமான பின் ஒருவர், தனது தனது கணவரிடம் 10 ரூபாய் மதிப்புள்ள லிப்ஸ்டிக் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பல கடைகளில் தேடியும் பத்து ரூபாய் லிப்ஸ்டிக் கிடைக்காததால், அதற்கு பதிலாக 30 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கி கொடுத்துள்ளார்.

lipstick

இதனைப் பார்த்து ஆத்திரம் அடைந்த மனைவி 10 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்காமல், ஏன் 30 ரூபாய் லிப்ஸ்டிக் வாங்கி நீங்க என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று போலீசில் புகாரளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குடும்ப ஆலோசனை மையத்திற்கு சென்ற நிலையில், அங்கு விசாரணை செய்ததில், எனது கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை. குழந்தைகளுக்காக சேமிக்கும் எண்ணமும் அவருக்கு இல்லை என அந்த பெண் கூறியுள்ளார். அதற்கு அந்த கணவர் 10 ரூபாய் விலையில் லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

lipstick

இதனையடுத்து இவர்கள் இருவரின் நிலைமையும் புரிந்து கொண்ட ஆலோசகர், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். லிப்ஸ்டிக் வாங்கியதற்காக தொடங்கிய சண்டை காவல் நிலையம் வரை வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.