இயற்கைக்கு மாறான உடலுறவு.. கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்து துப்பிய மனைவி!

இயற்கைக்கு மாறான உடலுறவு.. கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்து துப்பிய மனைவி!



Wife bite husband private part

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு அழைத்த கணவனின் அந்தரங்க உறுப்பை மனைவி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராம் நிஷாந்த் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அவர் தனது மனைவியை இயற்கைக்கு மாறான உடலுறவு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

UttarPradesh

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவியை மீண்டும் இயற்கைக்கு மாறான உடலுறவை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண் மறுத்தும் அந்தப் பெண்ணை கொடூரமாக வற்புறுத்தியுள்ளார்.

இதனால், மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண் கணவரின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ளார். இதில் அவரது அந்தரங்க உறுப்பில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

UttarPradesh

அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தினால் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் தாமாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காகவும், கிரிமினல் மிரட்டல் விடுத்ததற்காகவும் அந்த நபர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.