கணவனின் சடலத்தை வீடியோ காலில் பார்த்து கதறி அழுத மனைவி..! அப்பாவின் முகத்தை பார்த்து துடிதுடித்த மகள்..! சோக சம்பவம்..!

கணவனின் சடலத்தை வீடியோ காலில் பார்த்து கதறி அழுத மனைவி..! அப்பாவின் முகத்தை பார்த்து துடிதுடித்த மகள்..! சோக சம்பவம்..!


wife-and-daughter-see-mans-dead-body-in-video-call

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பூரில் மாட்டிக்கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் அவரது உடலை அவரது குடும்பத்தினர் வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆசாத்(52) என்ற நபர் திருப்பூரில் உள்ள பனியன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பாத்துவந்த நிலையில் ஊரடங்கு காரணமாக இங்கையே மாட்டிக்கொண்டார். ஏற்கனவே உடல்நல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த ஆசாத் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

corono

ஊரடங்கு சமயத்தில் அவரது உடலை மேற்குவங்கத்திற்கு கொண்டுசெல்ல அதிகம் பணம், மற்றும் போக்குவரத்துக்கு வசதி இல்லாததால் அவரது உடலை இங்கையே அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது.

இறந்தவரின் உடலை அவரது மனைவி மற்றும் மகள் வீடியோ கால் மூலம் பார்த்து கதறி அழுத சம்பவம் பாப்போரை கண்கலங்க வைத்தது.