இந்தியாவை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது.! உலக சுகாதார அமைப்பு வேதனை.!

இந்தியாவை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது.! உலக சுகாதார அமைப்பு வேதனை.!


who feel for india

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிப்படைந்து உயிரிழந்து வருகின்றனர்.

உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகளும் முன்வந்துள்ளன.

இந்தநிலையில், இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், இந்தியாவில் நிலவும் சூழலை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது. முக்கியமான உபகரணங்கள் வழங்குவது, விநியோகம் செய்வது என எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம் என தெரிவித்துள்ளார்.