பள்ளி வகுப்பறையில் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி மாணவன் போக்ஸோவில் கைது.!

பள்ளி வகுப்பறையில் வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி மாணவன் போக்ஸோவில் கைது.!



West Bengal Darjeeling Minor Girl Raped on Classroom by Minor Arrested Under Pocso Act 

 

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் படிக்கும் சிறுமி, வெள்ளிக்கிழமையன்று தனது வகுப்பறையில் வைத்து மற்றொரு பள்ளியில் பயின்றவரும் மாணவனான சிறுவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் முதலில் புகார் அளித்தும் பலன் இல்லை. சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை அப்பகுதியில் செல்வாக்கு மிக்க நகர் என்று கூர்பாடுகிறது. இதனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக முறையிட்டதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. 

விசாரணைக்கு பின்னர் சிறுவனின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறான். இந்த குற்ற சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.