முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் நச்சென்று கேள்வி எழுப்பிய நடிகர் விஷ்ணு விஷால்!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கிடம் நச்சென்று கேள்வி எழுப்பிய நடிகர் விஷ்ணு விஷால்!!



Vishnu vishal raised question against virendra shewag's tweet

இந்தியா - பாரத் பெயர் மாற்றம் குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து பலரும் அவர் அவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-     

"ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாம் பாரத் நாட்டை சேர்ந்தவர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர் & எங்கள் அசல் பெயரை 'பாரத்' அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. 

எனவே, இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் ஜெர்சியில் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று BCCI நான் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு தமிழ் திரைத்துறை நடிகரான விஷ்ணு விஷால், " இதனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயரால் நீங்கள் பெருமிதம் கொள்ளவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.