சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு அறிவிப்பு: வந்தே பாரத் இரயில் சேவை அறிவிப்பு.!

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு அறிவிப்பு: வந்தே பாரத் இரயில் சேவை அறிவிப்பு.!



vande-bharat-train-for-sabarimala-pilgrims

 

மார்கழி, தை மாதம் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு மாலை அணிவித்து விரதம் இன்று பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்கள் சபரிமலை சென்று வர எதுவாக அரசு சார்பில் போக்குவரத்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இரயில்வே துறையும் சிறப்பு இரயில்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், சபரிமலைக்கு செல்ல எதுவாக, சென்னை எம்.ஜி.ஆர் இரயில் நிலையத்தில் இருந்து கோட்டயத்திற்கு வந்தே பாரத் விரைவு இரயில் வாரம் இருமுறை என டிசம்பர் 15, 17, 22 மற்றும் 24 தேதிகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து கோட்டயம் நோக்கி புறப்படும் இரயில், அதிகாலை 04:30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. இதற்கு முன்பதிவுகள் தொடங்கி இருக்கின்றன.