மாணவனை நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் கயிறுகட்டி செங்கலை தொங்கவிட்டு கொடுமை; சக மாணவர்கள் அதிர்ச்சி செயல்.!.



uttar-pradesh-kanpur-neet-exam-student-loan-dispute-vio

நண்பர்களிடம் கடன் வாங்கி பணத்தை இழந்தவரிடம் பணம் கேட்டு மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த மாணவர், நீட் தேர்வுக்கு தாயாராகி வருகிறார். இதற்காக அங்குள்ள நீட் பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படிக்கிறார். 

கடன் வாங்கி பணத்தை இழந்த மாணவர்:

இந்நிலையில், மாணவர் தனது சக மாணவர்களிடம் ரூ.20 ஆயிரம் வரை கடன் வாங்கி, அதனை ஆன்லைன் கேமில் முதலீடு செய்து இழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கடன் கொடுத்த நபர்கள் மாணவரை கடுமையாக அடித்து துன்புறுத்தி இருக்கின்றனர். 

ஆணுறுப்பில் செங்கலை தொங்கவிட்டு கொடுமை:

மேலும், அவரின் தலை முடியை ஸ்பிரேவில் தீ வைத்து எரிக்க முயற்சித்தும், மாணவரை நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பில் கயிறு கட்டி செங்கலை தொங்கவிட்ட கொடுமையும் அரங்கேறி இருக்கிறது.

சக மாணவர்கள் 6 பேர் கைது:

இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகவே, காவல்துறையினர் விசாரணை நடத்தி தனய் சௌராசியா, அபிஷேக் வர்மா, யோகேஷ் விஸ்வகர்மா, சஞ்சீவ் யாதவ், ஹர்கோவிந்த் திவாரி, ஷிவா திரிபாதி ஆகியோரை கைது செய்தனர்.