வரவேற்பு நிகழ்ச்சியில் கொடூரம்.. இசைக்கச்சேரியை நிறுத்தியதற்கு அரங்கேறிய கொலை.!
வரவேற்பு நிகழ்ச்சியில் கொடூரம்.. இசைக்கச்சேரியை நிறுத்தியதற்கு அரங்கேறிய கொலை.!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கச்சேரியை நிறுத்தியதாக மணப்பெண்ணின் உறவினர் அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர், கோரக்நாத் பகுதியில் நேற்று அதிகாலை நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி அங்குள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது.
திருமணதிற்கான சடங்குகள் தொடர்ந்த நேரத்தில், இசைக்கச்சேரியை நிறுத்தக்கோரி மணமகளின் உறவினர் கோரிக்கை வைத்துள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராறில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, கொலையாளியை தேடி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர் ரோஹித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஐ.டி.ஐயில் பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.