வயல்வெளிக்கு சென்ற 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வீட்டுவேலைக்கு வந்த கொத்தனார் பகீர் செயல்.!



Uttar Pradesh Etawah 7 Aged Minor Girl Raped by Mason 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள எதாவாஹ் மாவட்டம், ஜஸ்வந்நகர் பகுதியில் 7 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி நேற்று மாலை தனது வீட்டருகே உள்ள வயல்வெளிப்பகுதிக்கு சென்றுள்ளார். 

இவர்களின் வீட்டருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமி தனியே வயலுக்கு செல்வதை கண்ட கொத்தனாரும் சிறுமியை பின்தொடர்ந்து இருக்கிறார். 

வயல்வெளி பகுதியில் ஆட்கள் இல்லாத இடத்தில் மதுபோதையில் சிறுமியிடம் கொத்தனார் அத்துமீறி இருக்கிறார். இதனால் ஒருகட்டத்தில் சிறுமி மயங்கி இருக்கிறார். 

சிறுமி இறந்துவிட்டதாக நினைத்து அவரை அங்கேயே விட்டுவிட்டு கொத்தனார் ஓட்டம் பிடித்த நிலையில், சிறுமியின் உறவுக்கார பெண்ணான மற்றொரு சிறுமி பாதிக்கப்பட்ட சிறுமியை தேடிச்சென்று மீட்டு வந்துள்ளார். 

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

புகாரை ஏற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்.