மகா சிவராத்திரிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்; சாலையோர நின்ற பக்தர்கள் 4 பேர் பலி.!

மகா சிவராத்திரிக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்; சாலையோர நின்ற பக்தர்கள் 4 பேர் பலி.!



Uttar Pradesh Bulandsahar Car Lorry Crash Pedestrians 4 Died 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார் மாவட்டம், குர்ஜா பகுதியில் சாலையோரத்தில் சிவராத்திரி நிகழ்ச்சிக்காக பயணித்தவர்கள் நின்றுகொண்டு இருந்தனர். 

இவர்கள் பண்டாரா பகுதியில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டு இருந்தனர். இந்நிலையில், சாலையோரம் இவர்கள் நின்றுகொண்டு இருந்தபோது, அவ்வழியே வந்த லாரி - கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இவ்விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த வாகனங்கள் சாலையோரம் இருந்த பக்தர்களின் மீது மோதியது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.