படிக்க தெரியதா மாப்பிள்ளைக்கு கல்யாணம் கேடா? திருமணத்தை நிறுத்திய மணமகள்.! 

படிக்க தெரியதா மாப்பிள்ளைக்கு கல்யாணம் கேடா? திருமணத்தை நிறுத்திய மணமகள்.! 



Uttar Pradesh Bride Stops Marriage 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மஹோபா பகுதியில் வசித்து வரும் நபருக்கு, அப்பகுதியை சேர்ந்த பெண்மணியை திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 

ஆனால், மணமகனுக்கு படிப்பறிவு இல்லை என்று கூறப்படுகிறது. இதனை மறைத்து மணமகன் படித்ததாக திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண நிகழ்வுகள் மற்றும் ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. 

ஊர்வலம் நிறைவுபெற்றதும் மணப்பெண் சீட்டு ஒன்றை கொடுத்து படிக்கச்சொல்ல, மணமகன் அதனை சரியாக படிக்கவில்லை. விசாரித்தபோது மணமகன் படிப்பறிவு குறைவு என்பது உறுதியானது. 

இதனையடுத்து, ஆவேசமடைந்த பெண்மணி தனது திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். இதனால் மணமகன் குடும்பத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.