கடைக்கு முன்பு இருந்த பல்பை திருடிய காவலர்; சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சி - குவியும் கண்டனம்.!

கடைக்கு முன்பு இருந்த பல்பை திருடிய காவலர்; சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சி - குவியும் கண்டனம்.!



Uttar Pradesh Ballia Cop Stolen Lamp bulb from Store Outside 

 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்லியா மாவட்டம், சிக்கந்தர்பூர் பகுதியில் கடை ஒன்று உள்ளது. கடைக்கு வெளியே வெளிச்சத்திற்காக சிறிய விளக்கு ஒன்று எரியவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சம்பவத்தன்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் ஒருவர், கடையின் வாசல் பகுதியில் இருந்த பல்பை தனது கையுடன் கழற்றிச்சென்றார். 

இதுகுறித்த வீடியோ காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகவே, அது தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், பொருள் திருடுபோனது என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். 

காவல்துறை அதிகாரியே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால், யாரின் மீது புகார் அளிப்பது? என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் மேற்கூறிய சம்பவத்திற்கு கண்டனத்தை குவிக்கின்றனர்.