என்னாடா முடி இது?., 15 மாணவர்களின் முடியை கத்திரிக்கோலால் வெட்டி வீசிய ஆசிரியை.!! பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்.!!

என்னாடா முடி இது?., 15 மாணவர்களின் முடியை கத்திரிக்கோலால் வெட்டி வீசிய ஆசிரியை.!! பணிநீக்கம் செய்த பள்ளி நிர்வாகம்.!!



UP teacher chops 15 students haircut

 

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நோய்டா, செக்டார் 168-ல் சாந்தி இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுஷ்மா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் நீண்ட தலைமுடியுடன் இருப்பதை கண்டு, முடியை வெட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் மாணவர்களில் சிலர் இதனை கேட்காத காரணத்தால், ஆசிரியை 15 மாணவர்களுக்கும் கத்திரிக்கோலால் தலை முடியை வெட்டியுள்ளார். 

இது குறித்து பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிடவே, உடனடியாக ஆசிரியை சுஷ்மாவை பள்ளி நிர்வாகம் வேலையை விட்டு நீக்க உத்தரவிட்டுள்ளது.