உக்ரைனில் உள்ள இந்தியர்கள், மாணவர்கள் நாடு திரும்ப உத்தரவு.!

உக்ரைனில் உள்ள இந்தியர்கள், மாணவர்கள் நாடு திரும்ப உத்தரவு.!



Ukraine India Indian Embassy Announce Students Return India

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா எப்போது வேண்டும் என்றாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக எச்சரித்து இருக்கிறார். இதனால் உலகின் பல்வேறு நாடுகள், ரஷியாவில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை நாட்டிற்கு திரும்ப அளித்துள்ளது. 

Ukraine

மேலும், தங்களது நாட்டின் பிரஜைகளும் உக்ரைனில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய தூதரகமும் உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூதரகத்தின் முகநூல் மற்றும் இணையத்தை விமான அறிவிப்புக்காக கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.