எலேய் எப்புட்றா.. பெண் பூனையை ஈன்ற ஆண்பூனை.. வினோத சம்பவத்தை காண திரளும் மக்கள்..!!..

எலேய் எப்புட்றா.. பெண் பூனையை ஈன்ற ஆண்பூனை.. வினோத சம்பவத்தை காண திரளும் மக்கள்..!!..



tripura-male-cat-delivery-girl-cat

 

திரிபுரா மாநிலத்தில் உள்ள கோமதி மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் அனில் பிஸ்வாஸ். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிற மோகி என்ற ஆண் பூனையை வளர்த்து வந்துள்ளார்.

இந்த ஆண் பூனை கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் பூனையை ஈன்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்த கிராம மக்கள் பலரும் அவரது வீட்டிற்கு திரண்டு சென்றனர்.

Tripura

மேலும் உள்ளூர் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனையை பரிசோதனை செய்துவிட்டு பதில் கூற முடியவில்லை என விழி பிதுங்கியுள்ளனர். 

அத்துடன் இயற்கையின் விதியை சவால் செய்யும் சம்பவம் என அறிவியல் ஆராச்சியாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.