இரண்டாவது முறையாக உறவுக்கு வர மறுத்த மனைவி: கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்..!

இரண்டாவது முறையாக உறவுக்கு வர மறுத்த மனைவி: கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்..!



The husband strangled his wife to death after she refused to have intercourse twice in the night

இரவில் இரு முறை உறவுக்கு வர மறுத்ததால், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (34). இவரது மனைவி ருக்‌ஷருக்கும் (30). ஒன்பது வருடங்களுக்கு திருமணமானது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அன்வர் அவரது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் ருக்‌ஷர் தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் மீண்டும் உறவுக்கு வருமாறு அன்வர் ருக்‌ஷரை அழைத்துள்ளார். அதற்கு ருக்‌ஷர் மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அன்வர் ருக்‌ஷரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொலை செய்த தனது மனைவி ருக்‌ஷரின் தலை முடியை வெட்டி, உடலை பிளாஸ்டிக் கவரில் கட்டிய அன்வர் அதை தனது கிராமத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலையில் இருக்கும் ரதுபுரா என்ற கிராமத்திற்கு சென்று வீசியுள்ளார். அதன் பிறகு, காலை தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ரதுபுரா கிராமத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக தகவல் வந்தது. அந்த பெண் சடலம் அன்வரின் மனைவி ருக்‌ஷர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். 
அன்வரை விசாரணை செய்த போது. விசாரணையில் இரவில் இரு முறை உறவுக்கு அவரது மனைவி வர மறுத்ததாகவும் அதனால் ருக்‌ஷரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அன்வர் ஒப்புக்கொண்டார்.

மேலும், அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர், மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் டேனிஷை கைது செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.