பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த மருத்துவர்கள்... அலட்சியத்தால் உயிர் பறிபோன பரிதாபம்...

பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்த மருத்துவர்கள்... அலட்சியத்தால் உயிர் பறிபோன பரிதாபம்...



the-doctors-who-sewed-a-bandage-on-the-womans-stomach-i

உத்தரபிரதேசத்தில் மருத்துவர்கள் அலட்சியமாக பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்ததால் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் போராட்டம் செய்தனர். 

உத்தரபிரதேசத்தின் பன்ஸ் கேரி கிராமத்தில் வசிக்கும் சம்சர் அலி, தனது மனைவிக்கு வயிற்றுவலி என்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் தொடர்ந்து வயிற்று வலி இருந்ததால், மனைவியை மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த போது, பெண்ணின் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைக்கப்பட்டது தெரிய வந்தது.

பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பேண்டேஜை அகற்றினர். இருத்த போதிலும் அந்த பெண் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.