லிப்டில் நடந்த கொடூரம்..வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்திய உரிமையாளர்... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..?



the-brutality-that-happened-in-the-liftthe-owner-who-ab

டெல்லியில் வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை வீட்டின் உரிமையாளர் தலைமுடியை பிடித்து கழுத்தை இறுக்கி வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த சிறுமியை வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் என்ற பெண் கொடுமைப்படுத்தி மிகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

brutality

மேலும் அந்த சிறுமியை அடித்தும், உதைத்தும் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது‌. அந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு செல்ல முயற்சிக்கும்போதெல்லாம் வீட்டின் உரிமையாளர் அந்த சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் லிப்டில் வைத்து வேலைக்கார பெண்ணான அந்த சிறுமியை வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.மேலும் அந்த வீடியோ காட்சிகளில் வீட்டின் உரிமையாளரான ஷெபாலி அந்த சிறுமியின் தலைமுடியை பிடித்து கழுத்தை இறுக்கியவாறு லிப்ட்டுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் வைரலானதை அடுத்து போலீசார் ஷெபாலி கவுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர.