ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 ராணுவ வீரர்களுக்கு காயம்!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - 2 ராணுவ வீரர்களுக்கு காயம்!



terrorist attack in jammu kashmir


ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள பாந்துஷான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

army

இந்தநிலையில், இன்று அதிகாலை தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்த இரண்டு ராணுவ வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.