அசாமில் பயங்கரம்.. குழந்தை இல்லாமல் தவித்த மகள்.. மகளின் தவிப்பை போக்க பெற்றோர் செய்த கொலை... பரபரப்பு சம்பவம்..!

அசாமில் பயங்கரம்.. குழந்தை இல்லாமல் தவித்த மகள்.. மகளின் தவிப்பை போக்க பெற்றோர் செய்த கொலை... பரபரப்பு சம்பவம்..!



terrible-in-assam-daughter-suffering-without-a-child-th

அசாமில் கொண்டுகுரி பகுதியை சேர்ந்தவர் நிதுமோனி லுகுராஷன் என்ற பெண் தனது ஆண் குழந்தையுடன் காணாமல் போய்விட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் துறைக்கு  புகார் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 20 ம் தேதி சரைடியோ மாவட்டத்திலுள்ள ராஜாபாரி தேயிலைத் தோட்டத்தில் நிதுமோனியின் உடல் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இந்த கொலையை செய்தது ஒரு முதிர் தம்பதி என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அந்த தம்பதியை சிமாலுக்குரி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணான நிதுமோனியை ஒருவேலை விஷயமாக தங்களது வீட்டிற்கு அழைத்துள்ளனர் இந்த முதிர் தம்பதியினர்.

Assam

மேலும் அவரிடமிருந்து குழந்தை பறிக்க முயற்சி செய்து பல சூழ்ச்சிகளை செய்துள்ளனர். இதற்கு நிதுமோனி மறுப்பு தெரிவிக்கவே அவரை கடுமையாக தாக்கி கொலை செய்துவிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளனர் அந்த தம்பதியினர்.

இந்நிலையில் அந்த தம்பதியினரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.