தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அப்டேட்..
தெலுங்கானா மாநிலம் உருவானது முதல் கடந்த 10 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ். இவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது. அதாவது நேற்று சந்திரசேகர் ராவ் எர்ரவெல்லி உள்ள தனது பண்ணை வீட்டில் இருக்கும் போது திடீரென பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கூறப்பட்டது.
அதனையடுத்து உடனே சந்திரசேகர் ராவை ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது சந்திரசேகர் ராவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது, சந்திரசேகர் ராவின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், அவரது இடது இடுப்பு மற்றும் கழுத்துப் பகுதியில் முறிவு ஏற்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு தேவையான சிகிச்சை அளித்து, அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி வர 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகும் எனவும் கூறியுள்ளனர்.