அல்லக்கைகளுடன் டூ வீலரில் வீலிங் செய்து மஜா வாழ்க்கை; லாரி மீது பாய்ந்து பலியான ரௌடி..!

அல்லக்கைகளுடன் டூ வீலரில் வீலிங் செய்து மஜா வாழ்க்கை; லாரி மீது பாய்ந்து பலியான ரௌடி..!



Telangana Hyderabad Rowdy Died Accident 


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த் சிங். இவர் அப்பகுதியில் ரௌடியாக வலம் வந்துள்ளார்.

அவ்வப்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்வதும் வழக்கம். 

சம்பவத்தன்று, அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீகாந்த் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தார். 

Telangana

அச்சமயம் எதிரே வந்த லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், ஸ்ரீகாந்த் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.