கடத்தல் நாடகம் நடத்தி காதலனை கரம்பிடித்த பெண்.. கதறிய குடும்பத்திற்கு ஷாக் வீடியோ அனுப்பிய டாட் லிட்டில் பிரின்சஸ்.! 

கடத்தல் நாடகம் நடத்தி காதலனை கரம்பிடித்த பெண்.. கதறிய குடும்பத்திற்கு ஷாக் வீடியோ அனுப்பிய டாட் லிட்டில் பிரின்சஸ்.! 



telangana-girl-fake-kidnap-drama-married-with-love-boy

 

தந்தையின்கண்முன் மகள் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில், காதலனை வைத்து பெண் செய்த மாஸ்டர் சம்பவம் உறுதியாகி குடும்பத்திற்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசில்லா, ஒட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஷாலினி (வயது 18). சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்றுகொண்டு இருந்த ஷாலினியை காரில் வந்த இளைஞர் கடத்தி சென்றார். 

தந்தை கண்முன் நடந்த சம்பவத்தால் அதிந்துபோன உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். 

Telangana

இதற்கிடையில், கடத்தலில் ஈடுபட்ட பெண் மாலையும் கழுத்துமாக வீடியோ வெளியிட்டார். அதில், நானும் - ஜான் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களின் குடும்பத்தினர் காதலை ஏற்காததால் கடத்தல் நாடகம் அரங்கேற்றி திருமணம் செய்ததாக தெரிவித்து இருக்கிறார். 

இதனையறிந்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.