கல்லூரி வளாகத்திலேயே சோகம்: மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை.. அதிர்ச்சி வீடியோ லீக்.!



Telangana College Girl Suicide 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்காரட்டி மாவட்டம், ருத்ராம் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த கல்லூரியில் பி.டெக் பயின்ற மாணவி ரேணு (வயது 19). இவர் தனது கல்லூரியில் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.