கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்: நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் பலி.!

கோவிலுக்கு செல்லும் வழியில் சோகம்: நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் பலி.!



Telangana Car Accident 4 Died 

 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹானம்கொண்டா - கரீம் நகர் பகுதியில் உள்ள எல்கதுர்ருதி பகுதியில் நடந்த வாகன விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காரில் பயணம் செய்த மந்தீனா சங்கர் (வயது 60), கந்தைஹ் (வயது 72), பரத் (வயது 29), வந்தனா (வயது 16) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் துயரம் சம்பவம் நடந்துள்ளது. மேலும், விபத்தில் படுகாயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

குடும்பத்தினர் அங்குள்ள வெமுலாவாடா கோவிலுக்கு சென்றபோது துயரம் நடந்தது தெரியவந்தது.