தோப்புக்கரணம் போட்ட 7 மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்.. தாமதமாக வந்ததால் சோகம்..!

தோப்புக்கரணம் போட்ட 7 மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம்.. தாமதமாக வந்ததால் சோகம்..!



teacher-punishment-a-student-for-late-coming-school

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளை 100 தோப்புகரணம் போட சொன்னதால், அவர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள போலன்கிர் மாவட்டம், பட்நகர் பகுதியில் பாபுஜி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில், நேற்று சில மாணவிகள் பள்ளிக்கு  தாமதமாக வந்ததால், அவர்களது ஆசிரியர் பிகாஸ்தரூவ் விசாரணை நடத்தி, 7 மாணவிகளை 100 தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை வழங்கியுள்ளார்.

இதில் 7 மாணவிகளும் தோப்புக்கரணம் போட்ட நிலையில், ஒரு கட்டத்திற்குப் பின் தோப்புக்கரணம் போட இயலாமல் நின்றனர். இருப்பினும் ஆசிரியர் கண்டித்ததால், மீண்டும் தோப்புக்கரணம் போட தொடங்கி ஏழு மாணவிகளும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். இதனையடுத்து மாணவிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மருத்துவ ஊர்தி வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

odisa

அத்துடன் அவர்கள் தோப்புக்கரணம் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிவரும் நிலையில், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாணவிகளுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியரிடம் ஓடிசா மாநில கல்வி மந்திரி சமீர்ரஞ்சன் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.