பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!

பள்ளி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!



Teacher harrasment to school girl in uttarpradesh

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ரோகித் குமார் என்ற ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை முருகனையாக காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவிக்கு அதிக மதிப்பெண்களையும் வழங்கியுள்ளார். மேலும் அந்த மாணவியுடன் வாட்ஸ் அப் மூலம் தினமும் அரட்டை அடித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென ஒரு நாள் மாணவிக்கு வாட்ஸ் அப்பில் பள்ளி விடுமுறை நாளில் பள்ளிக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

UttarPradesh

இதனையடுத்து ஆசிரியர் ரோகித் குமார் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மாணவி வாட்சப்பில் அனுப்பிய அனைத்து மெசேஜ்களையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவியின் பெற்றோர் ஆசிரியர் ரோகித் குமாரிடம் கேட்டதற்கு அவர் திமிராக பேசி மிரட்டியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க  சென்றுள்ளனர். அப்போது ஆசிரியரின் நண்பர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர்.

UttarPradesh

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரோஹித் குமார் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.