மாணவியின் ஆடைகளை அவிழ்த்த ஆசிரியர்.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!

மாணவியின் ஆடைகளை அவிழ்த்த ஆசிரியர்.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!



Teacher check student and get suicide

கர்நாடக மாநிலம் பாகல்கோட் அருகே உள்ள கடம்பூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கன்னட ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் ஜெயஸ்ரீயின் ஹேண்ட் பேக்கில் இருந்து 2000 ரூபாய் காணாமல் போயுள்ளது.

karnataka

இது குறித்து சில மாணவிகள் மீது ஆசிரியருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில பத்தாம் வகுப்பு மாணவிகள் மற்றும் எட்டாம் வகுப்பில் படித்து வந்த சிறுமி திவ்யாவையும் அழைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் விசாரித்துள்ளனர்.

அப்போது மாணவிகளின் ஆடைகளை அவிழ்க்க சொல்லி, அவர்களை சோதனை செய்துள்ளனர். மேலும், மாணவி திவ்யாவை ஒரு கோயிலுக்கு அழைத்து சென்று பணத்தை திருடவில்லை என சத்தியம் செய்யும்படியும் கேட்டுள்ளனர்.

karnataka

ஆசிரியர்களின் இந்த செயலால் மனமுடைந்த திவ்யா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் ஒன்றும் புரியாமல் இருந்த பெற்றோருக்கு, பள்ளியில் நடந்த சம்பவத்தை சக மாணவிகள் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த திவ்யாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜெயஸ்ரீ மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.