தனி ஒருவராக கொரோனா பாதித்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு! டீ கடைக்காரரின் நெகிழ்ச்சி செயல்!
தனி ஒருவராக கொரோனா பாதித்த குழந்தைக்கு இறுதிச் சடங்கு! டீ கடைக்காரரின் நெகிழ்ச்சி செயல்!
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் டீகடை நடத்திவருபவர் அப்துல் ரசாக், கேரளா கண்ணூரைச் சேர்ந்த இவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் தேநீர்க்கடை நடத்திவரும் ரசாக், தன்னார்வலராகவும் பொதுச்சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
நாற்பது வயது மதிக்கத்தக்க நபரான அப்துல் ரசாக், ஒரு இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்திச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இது குறித்து பிரபல பெங்களூரு நாளிதழில் செய்தி வந்தது. அதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த குழந்தைக்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Video of volunteer in #Bengaluru carrying a dead child in his arms has left netizens teary-eyed.
— Bangalore Mirror (@BangaloreMirror) August 20, 2020
More here: https://t.co/58rOoVYHgn pic.twitter.com/MoolRzyeFJ
சிறுநீரகக் கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பால் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது. தன்னார்வலர்களிடம் இருந்து அந்த குழந்தை இறந்த தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச் சென்று உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்குகளைச் செய்துள்ளார். இச்சம்பவம் மக்களை நெகிழவைத்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் ரசாக்கின் தன்னமலமற்ற சேவைக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.