சிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி.! அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.!

சிங்கப்பூரில் தமிழ்நாட்டு இளைஞன் செய்த நெகிழ்ச்சி உதவி.! அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் அரசு.!



tamil-nadu-young-man-helping-blind-man-cross-road

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் மணிகண்டன் என்ற இளைஞன் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ பகுதியில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்ததை பார்த்து அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பாக சாலையை கடக்க உதவினார். 

மேலும், அந்த முதியவரின் விருப்பப்படி அவரை மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டுள்ளார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோவை சிங்கப்பூர் அரசின் மனித சக்தி துறை அதிகாரிகள், சமூகவலைதள வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குணசேகரன் மணிகண்டனை கண்டுபிடித்தனர்.

சிங்கப்பூர் அரசு சார்பில் அவரை கவுரவித்து அன்பளிப்பையும் வழங்கினர். இது குறித்து குணசேகரன்மணிகண்டன் கூறுகையில், முடிந்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு அறிவுரை கூறியுள்ளனர். அந்த அறிவுரையை இப்போதும் கடைபிடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.