#BigBreaking: பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி; 2 ஆண்டுகள் சிறை தண்டனை - சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

#BigBreaking: பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி; 2 ஆண்டுகள் சிறை தண்டனை - சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!



surat-court-judgement-rahul-gandhi-is-accuse

 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தார். 

rahul gandhi

இது தொடர்பான வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இன்று தங்களின் தீர்ப்பை வழங்கினார். 

rahul gandhi

இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களின் முயற்சியால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.