கடும் பொருளாதார நெருக்கடி..ஒரு முட்டையின் விலை ரூ.28-, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283- சிக்கி தவிக்கும் இலங்கை..!

கடும் பொருளாதார நெருக்கடி..ஒரு முட்டையின் விலை ரூ.28-, பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283- சிக்கி தவிக்கும் இலங்கை..!



srilanka food price increased

இலங்கையில் எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவிக்கிறது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கியாஸ் இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் இலங்கையின் மிகப்பெரிய கியாஸ் நிறுவனங்களான லிட்ரோ கியாஸ் மற்றும் லாக்ஸ் கியாஸ் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இலங்கையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் மக்களை அச்சுறுத்தி உள்ளது. தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும். ஒரு முட்டையின் விலை ரூ.28 என்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தநிலையில், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சே நேற்று டெல்லி வந்து பாரத பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ள நிதியுதவிக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.