அதிர்ச்சி.. மெட்ரோ ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வங்கி ஊழியர்.. போலீஸ் தீவிர விசாரணை..!

அதிர்ச்சி.. மெட்ரோ ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வங்கி ஊழியர்.. போலீஸ் தீவிர விசாரணை..!



Shocking.. Bank employee committed suicide by jumping on metro train.. Police intensive investigation..!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சோப்ரா. இவர் அப்பகுதியில் உள்ள சிந்து வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்றுள்ளார்.

பின்னர் ரயிலில் இருந்து இறங்கிய சோப்ரா நடைமேடை பாதையிலே வெகு நேரமாக நின்று கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவழியாக வந்த மெட்ரோ ரயில் முன்பு திடீரென்று பாய்ந்து சோப்ரா தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.

punjab

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சோப்ராவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோப்ரா மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கின்றதா என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.