பெண் பிள்ளைகளை பெற்றவர்களே உஷார்: காதலர்களுக்காக மாநிலங்கள் தாண்டி ஓடிய பள்ளி மாணவிகளால் அதிர்ச்சி..!

பெண் பிள்ளைகளை பெற்றவர்களே உஷார்: காதலர்களுக்காக மாநிலங்கள் தாண்டி ஓடிய பள்ளி மாணவிகளால் அதிர்ச்சி..!



Shocked by schoolgirls who ran across states for lovers

மகாராஷ்டிர மாநிலம், பல்ஹர் மாவட்டம் நல சொபரா பகுதியை சேர்ந்தவர்களான 8 ஆம் வகுப்பு படித்துவரும் பள்ளி மாணவிகள் 3 பேர் கடந்த 14 ஆம் தேதி தங்கள் வீட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் வெளியேறியுள்ளனர். இதனையடுத்து அவர்களது பெற்றோர்கள், அவர்களை பல இடங்களில் தேடியும் மாணவிகள் கிடைக்கவில்லை.

மாணவிகள் காணாமல் போனது குறித்து, அவர்கள்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்தூறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமிகள் குஜராத் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து குஜராத் மாநிலம், வாபி நகரில் இருந்து 2 மாணவிகளையும், சூரத் நகரில் இருந்து ஒரு மாணவியையும் மீட்ட காவல்துறையினர் அவர்களை பல்ஹர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் வீட்டை விட்டு வெளியேறியதற்கான திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது. வீட்டைவிட்டு வெளியேறிய மாணவிகளில் 2 பேர் ராஜஸ்தானை சேர்ந்த 2 இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் சமூகவலைதளம் மூலம் மலர்ந்துள்ளது. தங்கள் காதலர்களுடன் சேர வேண்டும் என்ற ஆசையில்  2 மாணவிகளும் கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

காதலர்களுடன் சேர விரும்பிய 2 மாணவிகளுக்கு உதவ அவர்களது தோழியான மற்றொரு மாணவி அவர்களுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து மாணவிகள் 3 பேரும் ரெயில் மூலம் குஜராத் சென்றுள்ளனர். அங்கிருந்து ராஜஸ்தான் செல்ல மாணவிகள் திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.