பரபரப்பு வீடியோ... அரசு அதிகாரியின் காரை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவிகள்... மாணவிகள் மீது காவல்துறை தாக்குதல்.!

பரபரப்பு வீடியோ... அரசு அதிகாரியின் காரை அடித்து நொறுக்கிய பள்ளி மாணவிகள்... மாணவிகள் மீது காவல்துறை தாக்குதல்.!



school-girls-smashed-the-car-of-govt-official-police-be

பீகார் மாநிலத்தில் அரசு அதிகாரியின் கார் மாணவிகளால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மண்ஹர் என்ற பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அதை செய்து தரக் கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது மாணவிகளை அடக்க முயன்ற காவல்துறை அதிகாரி  பள்ளி மாணவிகளை தாக்கியதாக தெரிகிறது.

Bihar

இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் காவல்துறை அதிகாரியின் காரிய என நினைத்து கல்வித் துறை அதிகாரியின் மகேந்திரா ஸ்கார்பியோ காரை அடித்து நொறுக்கினர். பள்ளி சீருடையில் மாணவிகள் காரை அடித்து நொறுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் மாணவிகளை தாக்குவது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.