ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை இதனால் தான் திருமணம் செய்தேன்!. மாணவி கூறும் அதிர்ச்சி காரணம்!.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை இதனால் தான் திருமணம் செய்தேன்!. மாணவி கூறும் அதிர்ச்சி காரணம்!.



school girl saying reason for her marriage


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெய்கிருஷ்ணன் என்பவர் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். 65 வயதான இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்ட நிலையில் பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளார்.

ஜெய்கிருஷ்ணன் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு டியூசனும் எடுத்துவந்துள்ளார்.

இந்த நிலையில் ஜெய்கிருஷ்ணனுக்கும், மாணவிக்கும் இடையே  ஈர்ப்பு உருவானது. ஆசிரியர், மாணவி உறவு என்பதால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆனால் இருவரின் பழக்கம் காதலாக மாரி வீட்டுக்கு தெரியாமல் இருவரும் வெளியே சுற்ற ஆரம்பித்தனர்.

                           head master

மாணவி மகத் திடீரென காணாததால் அவரின் வீட்டார்கள் பெண்ணை தேட ஆரம்பித்தனர். இந்த நிலையில் இருவரும் ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இதனையடுத்து மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது அவர்கள் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் காவல்துறையினரிடம் அவர்கள் சிக்கினர்.

போலீசார் இருவரிடமும் விசாரித்தபோது நானும், ஜெய்கிருஷ்ணனும் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதாக மகத் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர். வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது இருக்கிறார் மகத்.

மகத்தின் பெற்றோர்கள் ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தனர். ஆனால், மகத்தின் நடவடிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டனர் குடும்பத்தினர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கூறுகையில், உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகத் அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என கூறினார்.

என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான், நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுதபட்டு, பஞ்சாப் மாநிலத்திற்கே அனுப்பிவைக்கப்பட்டனர்.