சிக்கன் கிரேவியா? சுண்டெலி கிரேவியா?! எலியை சுவைத்து சாப்பிட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி!!

சிக்கன் கிரேவியா? சுண்டெலி கிரேவியா?! எலியை சுவைத்து சாப்பிட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி!!



Rat in Chicken Gravy at Hotel

காராஷ்டிரா மாநிலத்தில் வங்கியில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஷாப்பிங் செய்வதற்கு சென்றுவிட்ட சபர் பந்த்ரா என்னும் பகுதியில் இயங்கி வரும்  உணவகம் ஒன்றுக்கு சாப்பிடுவதற்காக சென்று உள்ளார்.

அப்போது அங்கு அவர் சாப்பிடுவதற்கு சிக்கன் கிரேவி ஆர்டர் செய்துள்ளார். பின்னர் பரிமாறப்பட்ட சிக்கன் கிரேவியை சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வங்கி அதிகாரிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சிக்கன் கிரேவியை ஆர்டர் செய்த வங்கி அதிகாரி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிக்கன் துண்டு என்று நினைத்து செத்த எலியை கடித்துள்ளார். அப்போது வித்தியாசம் தெரியவே அதனை உற்று நோக்கிய அதிகாரிக்கு அது சிக்கனே இல்லை செத்த எலி என்று தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரி ஹோட்டல் உரிமையாளரிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். இதனால், ஹோட்டல் உரிமையாளர் வங்கி அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டார்.

பின்னர் வங்கி அதிகாரிக்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர் சிகிச்சை பெற்று பின் ஹோட்டல் உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.