ராமேஸ்வரம் சுற்றுலா வந்த முதியவர், கார் மோதி பலி: சாலை கடக்க முயற்சித்தபோது சோகம்.!

ராமேஸ்வரம் சுற்றுலா வந்த முதியவர், கார் மோதி பலி: சாலை கடக்க முயற்சித்தபோது சோகம்.!



Rajasthan Tourist Died on Near Rameswaram after Car Hits 

 

இராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பகவத் சிங் (வயது 60) என்பவர், தனது குடும்பத்துடன் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுலா வந்துள்ளார். 

அச்சமயம், மதுரை - இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில், மேல பெருங்கரை கிராமத்தில் இருக்கும் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அச்சமயம், அவ்வழியே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதனால் சாலையில் சில மீட்டர் தூக்கி வீசப்பட்ட பகவத் சிங், நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பார்தீபனூர் காவல் துறையினர், பகவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.