வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. பேரதிர்ச்சி சம்பவம்.!



Rajasthan Paran Girl Gang Rapped Police Investigation

தனது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பெண்மணியை, 2 பேர் கும்பல் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குக்குள் கொண்டு வர அரசு மற்றும் அதிகாரிகள் சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், பல கொடூரங்கள் நடந்து வருவது பெரும் வேதனையை அளிக்கிறது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரண் மாவட்டத்தை சார்ந்த பெண்மணி, தனது வீட்டிற்குள் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டிற்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள், உறக்கத்தில் இருந்த பெண்மணியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஒருவர் பெண்மணியை பிடித்துக்கொள்ள, மற்றொருவர் அத்துமீறி இருக்கிறார். 

rajasthan

இருவரும் சேர்ந்து பெண்மணியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்திடுவோம் என மிரட்டி சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்மணி விஷயம் குறித்து அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 கொடூரர்களையும் தேடி வருகின்றனர்.