BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; 24 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்..!
இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா மாவட்டம், புண்டி பகுதியில் 7 வயதுடைய சிறுமி, தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் உரிமையாளர் மகனுக்கு 24 வயது ஆகிறது.
சிறுமியிடம் அன்பாக இருப்பது போல பாவித்து வந்த சிறுவன், அவ்வப்போது சிறுமியிடம் விளையாடி வந்துள்ளார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி பலாத்காரம்
மறுநாளில் சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி இருக்கிறார். பெற்றோர் அவரை சோதித்தபோது, பலாத்காரம் செய்ததற்கான அடையாளம் தென்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிக்னிக் பயணத்தில் இப்படியா?.. இராணுவ வீரரை தாக்கி தோழி 7 பேர் கும்பலால் சீரழிப்பு.. ம.பி-யில் பயங்கரம்.!
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வீட்டின் உரிமையாளர் மகன் செய்த கொடூரம் அம்பலமாகி இருக்கிறது .இதனையடுத்து, இளைஞனின் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: தாயுடன் உறங்கிய 3 வயது சிறுமி பலாத்காரம்; 25 வயது இளைஞன் அதிர்ச்சி செயல்..!